ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எதிர்வரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், விஷால் அணியினர் மனு தாக்கல் செய்துள்ளனர். சரத்குமாரை எதிர்த்து நாசர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வருகிற 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போதுள்ள தலைவர் சரத்குமார், ராதாரவி மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி இளம் நடிகர்கள் விஷால் தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட உள்ளனர். இரு அணியினரும் தீவிர பிரச்சாரத்திலும், ஓட்டு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலுக்கு நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. சரத்குமார் அணியினர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு சரத்குமாரும், துணை தலைவர் பதவிக்கு நடிகர் விஜயகுமாரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று விஷால் அணி சார்பில் நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்ததோடு, நாசரை முன்மொழிந்தார்.
இந்நிலையில் இன்று விஷால் அணியினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சென்னை, தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் தலைவர் பதவிக்கும் நாசரும், துணை தலைவர் பதவிக்கும் கருணாஸ் மற்றும் பொன் வண்ணனும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தி உட்பட 24 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக விஷால் அணியினர், மறைந்த நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலைக்கும், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18ம் தேதி நடைபெறுகிறது. ஓட்டுக்கள் அன்று இரவே எண்ணப்பட்டு இரவே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.